நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கீழக்கரை,நவ.25: கீழக்கரை நகராட்சியின் சுகாதார சீர்கேட்டை கண்டித்து வீரகுல தமிழர் படை சார்பாக நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் கீழை பிரபாகரன் தலைமை வகித்தார். பெரியார் பேரவை தலைவர் நாகேஸ்வரன் மற்றும் மாவட்ட செயலாளர் கணேசன், மாநில செயலாளர் பழனி முருகன் முன்னிலை வகித்தனர். இதில் பல்வேறு கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: