திருவாரூர், நவ.24: பழைய ஓய்வூதியத் திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், , 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு எதிராக ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தியதை திரும்பப் பெற வேண்டும், மாநிலம் முழுவதும் காலியாக உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், அரசுத்துறைகளில் ஒப்பந்தம், தினக்கூலி, அவுட்சோர்சிங் முறைகளை தவிர்த்திட வேண்டும், தொழிலாளர் விரோத மற்றும் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும், கொரோனா தடுப்பு பணியாற்றிய மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், லேப் டெக்னீசியன், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் அனைவருக்கும் சிறப்பு ஊதியத்தினை உடனடியாக வழங்கிட வேண்டும்.