கம்பம், நவ.24: தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதிகளில் கடைகளின் பூட்டை உடைத்து திருடிய இளைஞரை கம்பம் தெற்கு போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் கூடலூர் மெயின் பஜாரில் உள்ள ரெடிமேட் கடை, இரும்பு கடை மற்றும் பெட்டி கடைகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கல்லாப்பெட்டியில் வைத்திருந்த பணம் திருடு போனது. இதேபோல கடந்த நவ.18ல் கம்பம் சார்பதிவாளர் அலுவலகம் அருகே, மூன்று சக்கர வாகனங்களுக்கு உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கல்லாப் பெட்டியில் வைத்திருந்த பணம் திருடு போனது. இதுதொடர்பாக உத்தமபாளையம் டி.எஸ்.பி சின்னக்கண்ணு உத்தரவின்பேரில் குற்றப்பிரிவு தனிப்படை சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் காவலர்கள் சுந்தரபாண்டியன், அழகுதுரை கொண்ட தனிப்படையினர் குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர்.