சீர்காழியில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

சீர்காழி,நவ.22: சீர்காழி நகர திமுக சார்பில் வார்டு, வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர செயலாளர் சுப்பராயன் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், சசிக்குமார், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் இராம.சேயோன், நகர துணை செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் பங்கேற்று சிறப்புறையாற்றினார். இதில் நகர நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Related Stories: