பருவமழை காலங்களில் இரவு நேர மீட்பு பணி ஊழியர்களுக்கு விளக்கு வழங்கல்

சீர்காழி, நவ. 22: சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் தமிழகத்தில் தொடங்கியுள்ள பருவமழையை எதிர்கொள்ள பொதுமக்கள் நலன் கருதி மீட்பு பணியை விரைவாக தொடங்க 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருவதால் அதனை எதிர்கொள்ள இரவு நேரங்களில் ஊழியர்கள் மீட்புப் பணிகளை விரைவில் மேற்கொள்ள பேரூராட்சி செயல் அலுவலர் குகன், ஊழியர்களுக்கு விளக்குகளை வழங்கி மீட்பு பணிகள் குறித்து அறிவுரை வழங்கினார். இதில் சக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: