நீடாமங்கலம், நவ.12: கீழப்பட்டு விவசாயி சத்தியபிரகாஷ் வயலில் மண்ணியல்துறை உதவி பேராசிரியர் அனுராதா தலைமையில் இந்த செயல்விளக்கம் நடந்தது. அப்போது உதவி பேராசிரியர் அனுராதா கூறுகையில், நேரடி நெல் விதைப்புக்கு குறைந்த அளவு விதையை பயன்படுத்தி பாய் நாற்றங்கால் அமைத்து விதைப்பு செய்யலாம். 14 நாட்கள் வயதுடைய இளம் நாற்றுகளை குத்துக்கு ஒரு நாற்று வைத்து நடவு செய்து கோனாவிடர் என்னும் களை கருவியை உபயோகித்து மண்ணை கிளறி விட்டு களையை கட்டுப்படுத்தலாம். நீர், மறைய நீர் கட்ட வேண்டும்.