அறந்தாங்கி, நவ.9: ஆவுடையார்கோவில் அருகே சாலை ஓரம் இருந்த வாட்டர் டேங்கில் பைக் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் பலியானார். ஆவுடையார் கோவிலை அடுத்துள்ள காவதுகுடியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (27). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். சதீஷ்குமார் விடுமுறையில் கடந்த சில மாதங்களுக்கு ஊர் திரும்பினார். அவர் நேற்று இரவு மீமிசலில் இருந்து ஆவுடையார் கோவில் நோக்கி தனது பைக்கில் வந்து கொண்டிருந்தார். விளானூர் அருகே வந்த போது சாலை ஓரம் இருந்த வாட்டர் டேங் மீது பைக் எதிர்பாராதவிதமாக மோதியது.