ராமேஸ்வரம், நவ. 9: ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில் பாலத்திற்கு அருகில் புதிய ரயில் பாலம் கட்டுவதற்காக கடலில் தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கிரேன், கலவை இயந்திரம், ஜெனரேட்டர், துளையிடும் கருவி பொருத்தப்பட்ட மிதவை மேடைகள் கடலில் நிறுத்தப்பட்டுள்ளன. கட்டுமான இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ள மிதவை மேடைகள் கடல் நீரோட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்டு பாம்பன் ரயில் பாலத்தின் தூண்களில் மோதி நிற்பது, தண்டவாளம் பொருத்தப்பட்ட இரும்பு கர்டரில் மோதி சிக்கிக்கொள்வது, கடல் சீற்றத்தால் மூழ்குவது போன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருகின்றன.