மதுரை, நவ.9: போனஸ் 20 சதவீதம் வழங்க கோரி நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தால், ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் சென்று ேசருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மதுரையில் ஜெய்ஹிந்த்புரம் உட்பட 10 இடங்களில் நுகர்பொருள் வாணிப கிட்டங்கிகள் உள்ளன. இங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த கிட்டங்கிகளில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஆண்டு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. இந்தாண்டு கொரோனாவை காரணம் காட்டி 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என அரசு அறிவித்தது.