மயிலாடுதுறை, நவ.9: கொரோனா தொற்று ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட சினிமா தியேட்டர்கள் நாளை (10ம் தேதி) திறக்கப்படவுள்ளது. திரையரங்குகளை திறப்பதற்கு அரசு பல்வேறு விதி முறைகளை கடைப்பிடித்து திறக்க அனுமதி அளித்துள்ளது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலைவாய்ப்பை இழந்து தவித்து வந்த 7 திரையரங்கத்தின் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மயிலாடுதுறை திரையரங்கில் அரசின் விதிமுறைப்படி பொதுமக்கள் சமுதாய விலகலை கடைபிடித்து படம் பார்ப்பதற்கு ஏதுவாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.