ஊட்டி, நவ. 9: நீலகிரி மாவட்டத்தில் பூங்காக்கள் தவிர்த்து பிற சுற்றுலா தலங்களை திறப்பதற்கான தடை தொடருவதால் சுற்றுலா ெதாழிலை நம்பியுள்ள பலரும் ஏமாற்றமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கொேரானா தொற்று ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு, சுற்றுலா பயணிகள் வருகை புரிய தடை விதிக்கப்பட்டது. அதன் பின் ஜூன் மாதம் முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதன்பின் செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட தளர்வில் பொது பூங்காக்கள் மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் 9ம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தாவரவியல பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்டவைகள் மட்டும் திறக்கப்பட்டன.