திருவில்லிபுத்தூர், நவ.5: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் போலீசார் டிஜிபி உத்தரவின் பேரில் மரக்கன்றுகளை நட்டனர். தமிழக டிஜிபி திரிபாதி தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அதிகளவில் மரக்கன்றுகளை நடவேண்டும் என உத்தரவிட்டு இருந்தார். இந்த உத்தரவின் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுமார் 48 காவல் நிலையங்களில் மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியது. அந்த வகையில் திருவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் சுமார் 11 காவல் நிலையங்களில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டது. திருவில்லிபுத்தூர் நகர், திருவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரம், மல்லி கிருஷ்ணன் கோயில், நத்தம்பட்டி, வத்திராயிருப்பு, கூமாபட்டி உட்பட அனைத்து போலீஸ் நிலையங்களில் மரக்கன்று நடப்பட்டது.