புதுக்கோட்டை, நவ.4: புதுக்கோட்டையில் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளருமான சஞ்சய் தத் கலந்து கொண்டார். வடக்கு மாவ ட்டம், தெற்கு மாவட்டம் உள்ளிட்ட இரு மாவட்டங்களில் இருந்து மாவட்ட , வட்டார காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிலருக்கு பேச வாய்ப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதில் பேச வாய்ப்பு கிடைக்காதவர்கள் ஆலோசனை கூட்டம் என்று தெரிவித்துவிட்டு பேசவிடாமல் இருப்பதும், சிலரை மட்டும் பேசவிடுவதும் ஏற்கதக்கதல்ல என்று கூச்சலிட்டனர்.