திருமங்கலம், நவ. 1: திருமங்கலத்தில் ஜெயலலிதா பேரவை சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அமைச்சர் உதயகுமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்பது அரசின் கோரிக்கையாகும். எனினும் அரசு பள்ளி மாணவர்களின் படிப்பை நனைவாக்கும் வகையில் அவர்கள் மருத்துவபடிப்பில் சேர 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என சட்டபேரவையில் முதல்வர் அறிவித்து, இதற்காக 7 பேர் கொண்ட குழுவையும் அமைத்தார். இக்குழுவின் பரிந்துரைப்படி அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்கலாம் என ஒப்புதல் அளிக்கப்பட்டு பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.