மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன ஞானபுரீஸ்வரர், தர்மபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை, அக்.30: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஞானபுரீஸ்வரர், தர்மபுரீஸ்வரர் கோயில்களில் பல்வேறு ஆதீனங்கள் முன்னிலையில் குடமுழுக்கு நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் எழுந்தருளியுள்ள ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர், அபயாம்பிகை சமேத தருமபுரீஸ்வரர் சுவாமி கோயில் முழுவதும் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு குடமுழுக்கு 29ம் தேதி நடந்தது. குடமுழுக்ககையொட்டி 27-ம் தேதி கணபதி ஹோமத்துடன் பூர்வாங்க பூஜைகள் தொடங்கி முதல்கால யாகசாலை பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து காலை 6 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை தொடங்கி காலை 9 மணிக்கு பூர்ணாஹுதியாகி கடம் புறப்பட்டு கோயிலை வலம்வந்து தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் காலை 9.40 மணிக்கு ஞானபுரீஸ்வரர் கோயில் குடமுழுக்கும், தர்மபுரீஸ்வரர் கோயில் 10.20 மணிக்கு குடமுழுக்கு நடந்தது.இதில் திருப்பனந்தாள் ஆதினம் முத்துக்குமாரசுவாமி தம்பிரான்சுவாமிகள், பல்வேறு ஆதீன கட்டளை தம்பிரான் கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: