புதுக்கோட்டை, அக். 29: புதுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் டெங்கு தடுப்பு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். புதுக்கோட்டை நகராட்சியில் பணி புரியும் டெங்கு தடுப்பு பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: நாங்கள் பத்தாண்டுகளாக புதுக்கோட்டை நகராட்சியில் நன் முறையில் பணியாற்றி வருகிறோம். ஒரு சமயத்தில் நிரந்தர துப்புரவு பணியாளர்கள் ஒரு வார காலம் வேலைக்கு வரவில்லை. அந்த சமயத்தில் டெங்கு பணியாளர்களை வைத்துதான் 42 வார்டுகளிலும் துப்புரவு பணி செய்தார்கள். அதேபோல் கஜா புயல் நேரத்திலும் 42 வார்டுகளிலும் டெங்கு பணியாளர்கள் தான் வேலை செய்தார்கள்.