வெள்ளகோவிலில் ரூ. 51 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை

வெள்ளகோவில், அக். 29:  வெள்ளகோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ.51 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை நடைபெற்றது. வெள்ளகோவில், திருச்சி, லாலாபேட்டை, கரூர். வாணியம்பாடி, வில்வாதம்பட்டி, திண்டுக்கல், பகுதி விவசாயிகள் 108 பேர், 53 ஆயிரம் கிலோ எடை கொண்ட 1058 தேங்காய் பருப்பு மூட்டைகளை, வெள்ளகோவில் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்திற்கு நேற்று கொண்டு வந்திருந்தனர். விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மாரியப்பன் முன்னிலையில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதி எண்ணெய் ஆலை உரிமையாளர்கள் 22 பேர் ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் தரமான முதல் தர பருப்பு அதிகபட்சமாக கிலோ 117 ரூபாய் 35 காசுக்கும், இரண்டாம் தரம் கிலோ 76.70 ரூபாய்க்கும் ஏலம் நடைபெற்றது. மொத்தம் 51 லட்சத்து, 89 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.

Related Stories: