சாயல்குடி, அக்.28: முதுகுளத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. தாலுகா, யூனியன் தலைமையிடமாக உள்ளது. 200க்கும் மேற்பட்ட கிராம மக்களின் வர்த்தகம், அலுவலகங்கள், மருத்துவமனை வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடலாடி விலக்கு, தேரிருவேலி விலக்கு, அபிராமம் விலக்கு போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் சாலை பாதுகாப்பு, பொதுமக்கள் நலன் கருதி முதுகுளத்தூர் காவல்துறை சார்பில் தேவையான இடங்களில் பேரிக்கார்டு தடுப்புகள், ஒளிரும் சிக்னல் போன்றவை பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டு, அதனை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி அக்.23ம் தேதி எஸ்.பி கார்த்திக் தலைமையில் தடல்புடலாக நடந்தது. ஆனால் துவக்கி வைக்கப்பட்டு மூன்றே நாள் ஆன நிலையில் கடலாடி சாலையிலிருந்து முதுகுளத்தூர் நுழைவு பகுதியில் வைக்கப்பட்ட ஒளிரும் விளக்கு எரியாமல் அணைந்து கிடக்கிறது.