ராமநாதபுரம், அக்.28: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் ‘லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழி” எடுத்துக் கொண்டனர்.
நாட்டின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம் இன்றியமையாததாகும். இத்தகைய வெளிப்படையான சமுதாயத்தை உருவாக்குவதில் குடிமக்கள், அரசு மற்றும் தனியார் அமைப்புகள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதனை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.