விவசாயத்தை பாதுகாக்க கோரி ஏரலில் போராட்டம்

ஏரல், அக். 23:  விவசாயத்தை பாதுகாக்கக் கோரி ஏரலில் தமிழர் கழகத்தினர்  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏரல் காந்தி சிலை அருகே துவங்கிய இப்போராட்டத்திற்கு வைகுண்டம் ஒன்றியச் செயலாளர் காசி தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். இதில்  பங்கேற்ற சாயர்புரம் நகரச் செயலாளர் திருமணி, இளைஞர் அணி ஏரல் நகரச் செயலாளர் ராமச்சந்திரன், சூளைவாய்க்கால் பால்துரை, பொன்துரை, ஏரல் பிரவீன், கோட்டைக்காடு தர்மராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Related Stories: