சிவகங்கை, அக்.22: மருதுபாண்டியர் நினைவு நாளுக்கு அவர்களது நினைவிடங்களில் மரியாதை செலுத்த வருபவர்கள் நாளைக்குள் முன் அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:தி ருப்பத்தூரில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் 219வது நினைவு தின விழா 24.10.2020 மற்றும் காளையார்கோவிலில் 27.10.2020 அன்று நினைவு நாள் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுமக்களின் நலன் கருதி அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல்களை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.