தொண்டி, அக்.21: தொண்டி வட்டாணம் ரோட்டில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நேற்று ஏராளமானோர் போலீஸ் ஸ்டேசனில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொண்டி வட்டாணம் ரோட்டில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. ஆரம்ப சுகாதார நிலையம், முக்கியமான பஸ் ஸ்டாப், பள்ளி கூடங்களுக்கு செல்லும் வழி, குடி தண்ணீர் குளம் என பொது மக்களின் பயன்பாட்டில் உள்ள இடத்தில் இடையூறாக இக்கடை இயங்கி வந்தது. இதை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பல்வேறு இயக்கங்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு கடை குறைப்பின் போது இக்கடை அடைக்கப்பட்டதால், பொது மக்கள் நிம்மதி அடைந்தனர். இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் கடை திறப்பதாக தகவல் பரவியது. இதனால் மீண்டும் பொதுமக்கள் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.