ஆர்.எஸ்.மங்கலம், அக்.21: திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி மற்றும் பாலம் அமைக்கும் பணி மிகவும் மெதுவாக நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணி சுமார் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகின்றது. நீண்ட நாட்களாக பணி நடைபெற்று வந்தாலும், இன்னும் முழுமை அடையவில்லை. காரணம் ஆங்காங்கே பலம் கட்டும் பணி நடைபெற்று பல இடங்களில் ரோடு பள்ளம் தோண்டப்பட்டு மண் ,ஜல்லி ஆகியவை கொட்டி இருப்பதால் சில இடங்களில் பாலம் அமைப்பதற்கு கம்பிகள் கட்டப்பட்டவாறே இருப்பதாலும் போக்குவரத்திற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.