சாயல்குடி, அக்.20: கமுதி அருகே பசும்பொன் கிராமத்திலுள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்திற்கு முக்கிய தலைவர்கள் வருவதால் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து கமுதியில் நேற்று ஐஜி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் ஆண்டுதோறும் அக்.28, 29 மற்றும் 30ல் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது நினைவிடத்தில் 28ம் தேதி ஆன்மீக விழா யாகசாலை பூஜைகளுடன் துவங்கும், இரண்டாம் நாள் வழக்கமான பூஜைகள், அரசியல் விழா நடக்கும், மூன்றாம் நாள் குருபூஜையும், அரசு விழாவும் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு கொரோனா தொற்றின் காரணமாக வழக்கமான கொண்டாட்டங்கள், வெளிமாவட்டம், வெளி பகுதியிலிருந்து பொதுமக்கள் வந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.