புதுக்கோட்டை, அக்.20: முறைசாராத் தொழிலாளர்களுக்கான நலவாரியப் பயன்களை முழுமையாக வழங்கக்கோரியும், அனைவருக்கும் கொரோனா நிவாரணம் வழங்க கோரியும் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் நேற்று தொழிலாளர்கள் உண்டு, உறங்கி காத்திருக்கும் போராட்டத்தை நடத்தினர். கொரோனா கால நிவாரணத் தொகை அனைத்து முறைசாராத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்படவில்லை. முறையாக பதிவை புதுப்பித்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. பதிவை புதுப்பிக்காவிட்டாலும் அவர்களுக்கும் வழங்க வேண்டுமென அனைத்து தொழிற்சங்கங்களும் போராட்டங்களை நடத்தி வந்தனர்.