தஞ்சை, அக். 18: திருவிசநல்லூர் பஞ்சமுக மகா மங்கள பிரித்திங்கரா தேவி திருக்கோயிலில் நேற்று பல்லாயிரக்கணக்கான தாமரை புஷ்பங்களால் எல்லாவிதமான மலர்களாலும் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. கொரோனா வைரசில் இருந்து நிவாரணம் அடைய வேண்டியும், அவரவர்கள் குடும்ப நலன் பெற வேண்டியும் சிறப்பு பூஜை நடைபெற்றது. தமிழகத்திலேயே எல்லாவிதமான நலன்களையும் வாரி வழங்கும் பஞ்சமுக மகா மங்கள பிரித்திங்கரா தேவி 9 அடி உயரத்தில் ஐந்து முகத்துடன் அமர்ந்த கோலத்தில் காவிரி வடகரையில் அமர்ந்த திருத்தலம் எல்லாவிதமான நலன்களையும் விளங்கும் திருத்தலம் ஆகும். நேற்று காலை 11 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் நிகும்பல யாகம் சிறப்பாக நடைபெற்றது. இந்த யாகத்தில் ஹோம பொருட்கள் எல்லா விதமான பழங்கள் பட்டுப் புடவை மிளகாய் யாகம் சிறப்பாக நடைபெற்றது.