விருதுநகரில் தீபாவளியை முன்னிட்டு கோ ஆப்டெக்ஸில் தள்ளுபடி விற்பனை

விருதுநகர், அக்.16:  விருதுநகர் கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் கண்ணன் நேற்று துவக்கி வைத்தார். கைத்தறி, பருத்தி, பட்டு ரகங்களுக்கு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.  கோ ஆப்டெக்ஸ் ஜவுளி ரகங்களை  www.cooptex.com இணையதளத்தின் மூலமாக ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். விருதுநகர் விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டு ரூ.46.28 லட்சங்களுக்கு தீபாவளி விற்பனை நடைபெற்றது. நடப்பு ஆண்டு ரூ.55 லட்சம் விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மண்டல மேலாளர் நாகராஜன், மேலாளர் சந்தனமாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: