திண்டிவனம், அக். 2: திண்டிவனம் உட்கோட்ட டிஎஸ்பி கணேசன் தலைமையில் நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் தமிழ்மணி, செல்வராஜ், தனிப்பிரிவு காவலர் ஆதி உள்ளிட்ட போலீசார் மரக்காணம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த நபர் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றதால் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் விழுப்புரம் அடுத்த வளவனூர் பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் எழில் என்கின்ற எழிலேந்திரன் (38) என தெரியவந்தது. இவர் சென்னையில் கூடுவாஞ்சேரி, வளசரவாக்கம், குமரன் நகர், காசிமேடு உள்ளிட்ட 20 இடங்களில் ஆளில்லாத வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.