நாங்குநேரி, அக். 1: நாங்குநேரி பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். நாங்குநேரியை சேர்ந்த சத்துணவு உதவியாளர் சரவணன் மனைவி லட்சுமி (35). கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவருடன் பைக்கில் செல்லும் போது பின்தொடர்ந்து பைக்கில் வந்த இருவர், சிங்கநேரி பகுதியில் லட்சுமி கழுத்தில் கிடந்த பித்தளை தாலிச்செயினை பறித்தனர். அப்போது பைக்கில் இருந்துதவறி விழுந்த லட்சுமி காயமடைந்து நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து நாங்குநேரி சப்-இன்ஸ்பெக்டர் மார்கரெட் தெரசா வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தார். இதேபோல் நாங்குநேரி சன்னதி தெருவில் அதிகாலையில் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண் ஒருவரிடமும் பித்தளை செயின் பறிப்பு நடந்தது. அவர் புகார் அளிக்கவில்லை.