தக்கலை, செப்.29: தக்கலை மேட்டுக்கடையில் இருந்து திருவிதாங்கோடு செல்லும் சாலையில், மாவட்ட முன்னாள் சுகாதார பணிகள் துறை அதிகாரி ஒருவருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்தவர்கள் பாலியல் தொழில் நடத்துவதாக காவல்துறைக்கு புகாருக்கு மேல் புகார் சென்றது. அதன்படி நேற்று முன்தினம் காலை ரகசிய போலீசார் அந்த பகுதி முழுவதும் நோட்டமிட்டனர். இதை தெரிந்து கொண்ட புரோக்கர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். சுதாரித்துக் கொண்ட போலீசார் உடனடியாக சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது 2 ஆண்கள், 4 மாணவிகள், ஒரு ெபண் ஆகியோர் அரை குறை ஆடைகளுடன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவர்களிடம் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தினர். இதில் தக்கலை மேட்டுக்கடையை சேர்ந்த 36 வயது பெண், தனது மகள்கள் 3 பேர், உறவினர் ஒருவரது மகள் ஆகியோரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது.