ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

விருதுநகர், செப். 29: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திலுள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு நேற்று ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் வைரமுத்து தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ராஜபாளையம் ஒன்றியத்தில் ஆசிரியர்கள் ஓய்வூதிய பலன்களை தரமறுப்பது, பணிப்பதிவேட்டில் பணப்பலன்களை பதிய மறுப்பது, அருப்புக்கோட்டை ஒன்றியம் பாலவனத்தம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியரை பணியேற்க ஆணை வழங்க மறுப்பது, உயர்நீதிமன்ற ஆணையிட்ட பிறகும் 75 ஆசிரியர்களை 17 பி ரத்து செய்யாததை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories: