புரட்டாசி பொங்கல் விழாவில் சிலம்பாட்டம் அரங்கேற்றம்

கமுதி, செப்.25:  கமுதி அருகே புரட்டாசி பொங்கல் விழாவில் சிலம்பாட்ட அரங்கேற்றம் நடைபெற்றது. கமுதி அருகே புத்துருத்தி கிராமத்தில் புரட்டாசி மாத பொங்கல் விழாவை முன்னிட்டு கருப்பணசாமி, விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மாலையில் சிலம்பாட்ட அரங்கேற்றம் நடைபெற்றது. இதில் சிறியவர்கள் மற்றும் இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் இதனை துவக்கி வைத்தார். சிறுவர்கள் சிலம்பாட்ட பயிற்சி முறையாக கற்றுக்கொண்டு விளையாடியதை பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இதில் கமுதி அதிமுக ஒன்றிய செயலாளர் காளிமுத்து, புத்துருத்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் நாகராஜ், டி.புனவாசல் கூட்டுறவு சங்க தலைவர் கர்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: