புழல்: புழல் மழை நீர் கால்வாய் கழிவு நீர் கலக்கும் கால்வாயாக மாறி உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாதவரம் மண்டலம் 25வது வார்டு புழல் அடுத்த கதிர்வேடு கட்டிட தொழிலாளர் நகர் அருகில் சுமார் 80 அடி அகலத்தில் மழைநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் மழைக்காலங்களில் சேரும் மழைநீர் மாதவரம் ரெட்டேரி பகுதிக்கு சென்றடையும். தற்போது இந்த மழைநீர் கால்வாய் உரிய பராமரிப்பு இல்லாததால் இரண்டு பக்கங்களிலும் கரைகள் இல்லாததாலும் கட்டிட தொழிலாளர்கள் நகர் பகுதியில் வசிக்கும் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் பகுதிகளில் சேரும் குப்பைகள் மற்றும் அருகில் உள்ள நகர் பகுதியில் சேரும் குப்பைகளை அப்பகுதி மக்கள் இந்த மழைநீர் கால்வாயில் வீசுகின்றனர். இதனால் கால்வாயில் உள்ள நீரின் நிறம் பச்சையாக மாறி துர்நாற்றம் வீசுகிறது.