திருவில்லிபுத்தூர், மார்ச் 19: திருவில்லிபுத்தூர் அருகே பெரியமாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவிற்கு மீண்டும் அனுமதி வழங்கக்கோரி பக்தர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைத் தொடர்ந்து வருகிற 23ம் தேதி வெகுவிமரிசையாக பூக்குழி திருவிழா நடைபெற இருந்தது. சுமார் 15 ஆயிரம் பக்தர்கள் விரதமிருந்து பூக்குழி இறங்க தயாராக இருந்தனர்.