இடைப்பாடி, மார்ச் 18: இடைப்பாடி பகுதியில் நிலக்கடலை அறுவடை தொடங்கி முழுவீச்சில் நடந்து வரும் நிலையில், மகசூல் குறைந்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இடைப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 500 ஏக்கர் பரப்பில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனர். நடவின்போது நல்ல மழை பெய்ததால் பயிர் செழித்து வளர்ந்த நிலையில் தற்போது அறுவடை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், செடிகள் நன்கு வளர்ந்த நிலையில் எதிர்பாரத்த அளவிற்கு காய்கள் பிடிக்கவில்லை. செடிகளில் குறைந்த எண்ணிக்கையிலேயே காய்கள் உள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.