சிவகங்கை, மார்ச் 17: சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா நலவாரியங்களில் பதிவு பெற்று ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்கள் நேரில் வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் உஷா விடுத்துள்ள அறிக்கையில், சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா நலவாரியங்களில் பதிவு பெற்று ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்கள் 2020ம் ஆண்டிற்கான ஆயுள் சான்று சமர்ப்பிக்க ஏப்.1 முதல் ஏப்.30ம் தேதி வரை அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும்.