விழுப்புரம், மார்ச் 17: திண்டிவனம் அருகே மேல்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பழங்குடி இருளர் மற்றும் வேட்டைகயூர் இன மக்கள் வீட்டு மனை பட்டா கோரி விழுப்புரம் ஆட்சியரிடம் மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மேல்பாக்கம் கிராம மக்கள், ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: இந்த பகுதியில் உள்ள குளக்கரையில் 50 ஆண்டுகளாக நாங்கள் வசிக்கிறோம். எங்கள் பகுதியில் பழங்குடி இருளர் எட்டு குடும்பங்களும், வேட்டைகயூர்கள் 18 குடும்பங்களும் வசிக்கின்றனர்.