விழுப்புரம், மார்ச் 17: கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்தேக்கதொட்டி ஊழியர்கள், துப்புரவு ஊழியர்களை பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். ஊதியக்குழு பரிந்துரையின்படி நிலுவையுடன் மாத ஊதியம் வழங்கிடவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜீவா தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட தலைவர் முத்துக்குமரன், மாவட்ட செயலாளர் மூர்த்தி, பாலகிருஷ்ணன், புருஷோத்தமன், குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
கள்ளக்குறிச்சி: கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் சங்கத்தினர் கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.