10 தாலுகாவில் இன்று சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

ஈரோடு, மார்ச் 13:ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் இன்று (13ம் தேதி) வருவாய்த்துறை சார்பில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம்கள் நடைபெற உள்ளது.

அதன்படி, ஈரோடு வட்டத்தில் பெரியசேமூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், மொடக்குறிச்சி 46 புதூர், கொடுமுடி புஞ்சை கிளாம்பாடி, பெருந்துறை பள்ளபாளையம், பவானி கல்பாவி, அந்தியூர் ஒட்டப்பாளையம், கோபிசெட்டிபாளையம் தடப்பள்ளி, சத்தியமங்கலம் இக்கரைநெகமம், நம்பியூர் பொலவபாளையம், தாளவாடி ஆசனூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக கொடுத்து தீர்வு காணலாம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories: