திருப்புத்தூர், மார்ச் 12: திருப்புத்தூர் அடுத்த பட்டமங்கலம் அருகே தவசியேந்தல்பட்டியில் உள்ள பயணியர் நிழல்குடையின் மேற்கூரை பெயர்ந்து ஆபத்தானநிலையில் உள்ளது. இதனால் அந்த கட்டடத்தில் நிற்க பொதுமக்கள் அச்சப்படுகிறன்றனர். திருப்புத்தூர்-கல்லல் செல்லும் ரோட்டில் பட்டமங்கலத்தை அடுத்துள்ள தவசியேந்தல்பட்டி விலக்கில் பயணியர் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை கட்டி சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. தவசியேந்தல்பட்டி விலக்கில் இருந்து இந்த வழியாக கல்லல், திருப்புத்தூர், மதகுபட்டி, சொக்கநாதபுரம், திருக்கோஷ்டியூர், பட்டமங்கலம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் மக்கள் இந்த நிழற்குடையில்தான் காத்திருப்பார்கள். மேலும் இந்த விலக்கு ரோட்டில் இருந்து தவசியேந்தல்பட்டிக்கு 2 கி.மீ. தூரம் செல்லவேண்டும்.