விடுதலை சிறுத்தை கண்டன ஆர்ப்பாட்டம்

வானூர், மார்ச் 10: வானூரில் தாலுகா அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வானூர் வட்டம் எறையூர் பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரியில் தமிழக அரசின் அனுமதியை மீறி நடத்துவதால் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி ஒன்றிய செயலாளர் தமிழ்முகிலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் இரணியன் முன்னிலை வகித்தார். செயலாளர் ஆற்றலரசு, நாடாளுமன்ற தொகுதி செயலாளர் அய்யாகரிகாலன், நிர்வாகிகள் ராஜாங்கம், அன்பரசு, தண்டபாணி, பெரியசாமி, சிவசங்கர் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: