கள்ளக்குறிச்சி, மார்ச் 10: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை டிவிஎன் ரோடு பகுதியை சேர்ந்த ஜானகிஅம்மாள் மற்றும் பலர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலாவிடம் கோரிக்கை அனு அளித்தனர். அதில் மேற்கண்ட முகவரியில் கடந்த 80 ஆண்டுகாலமாக வசித்து வருகிறோம். என்னுடன் மூன்று மகன்கள், மருமகள், பேரன், பேத்தி என 15 பேர் வசித்து வருகிறோம். இந்த முகவரியில் உள்ள வீட்டுக்கு சுமார் 80 ஆண்டுகாலமாக வீட்டு வரி, சொத்துவரி, மின்சார கட்டணம் ஆகியவை செலுத்தி கொண்டு வருகிறோம். பலமுறை பட்டா கேட்டும் எங்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. இதுபோன்று அதே பகுதியை சேர்ந்த 15 பேர் குடியிருந்து வரும் வீட்டிற்கு பட்டா வழங்க வேண்டி தனித்தனியாக ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதனை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.