60 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்த மாடு உயிருடன் மீட்பு

உடுமலை, மார்ச் 10:உடுமலை அருகே உள்ள ஜிலேப்ப நாயக்கன் பாளையம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் கறவை மாடு வளர்த்து வருகிறார். அவரது தோட்டத்தில் உள்ள 60 அடி ஆழ கிணற்றில் நேற்று பசு மாடு தவறி விழுந்து உயிருக்கு போராடியது. தகவல் அறிந்து, உடுமலை தீயணைப்பு குழுவினர், நிலைய அலுவலர் ஹரிராமகிருஷ்ணன் தலைமையில் விரைந்து வந்து, கயிறு கட்டி ஒரு மணி நேரம் போராடி மாட்டை உயிருடன் மீட்டனர். வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக உறுதிபட நின்று போராட வேண்டும்.

Related Stories: