குடியுரிமை சட்டத்தை விளக்கி பாஜக கூட்டம்

திருக்கோவிலூர், மார்ச் 6: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் செட்டிதாங்கலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை விளக்க செய்தியாளர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஓபிசி அணி மாநில பொதுச்செயலாளர் பெரோஸ்காந்தி குடியுரிமை திருத்த சட்டத்தை விளக்கி பேசினார். விழுப்புரம் மாவட்ட தலைவர் கலிவரதன், கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் பாலசுந்தரம், கள்ளக்குறிச்சி மாவட்ட பொதுச்செயலாளர்கள் ராஜேஷ், கஜேந்திரன், மாவட்ட பொருளாளர் கண்ணன், திருக்கோவிலூர் கிழக்கு ஒன்றிய தலைவர் ராமன், திருக்கோவிலூர் மேற்கு ஒன்றிய தலைவர் முருகன், முகையூர் மேற்கு ஒன்றிய தலைவர் தங்கராஜ், இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளர் திருமால், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஹரிகிருஷ்ணன், ஒன்றிய நிர்வாகிகள் அரிகிருஷ்ணன், பாடியந்தல் விஜயகுமார், பழங்கூர் மணி, சித்தேரி ராமதாஸ், சுரேஷ், ஜெகநாதன், ராஜாஜி, ஏழுமலை, பழனிச்சாமி, கலைசெல்வி, மலர்கொடி மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: