களக்காடு, மார்ச் 5: களக்காடு அருகே விவசாயியை தாக்கிய தந்தை மகனை போலீசார் தேடி வருகின்றனர். களக்காடு அருகே உள்ள கீழக்காடுவெட்டி மங்கம்மாள் சாலையை சேர்ந்தவர் விவசாயி ராமச்சந்திரன் (72). சம்பவத்தன்று இவர் வீட்டு அருகே உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த அய்யாதுரை என்பவர் குடிநீர் குழாயில் இருந்து மற்றொரு குழாய் மூலம் மிளகாய் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். இதைப்பார்த்த ராமச்சந்திரன் தட்டிக் கேட்டார்.