குஜிலியம்பாறை, மார்ச். 4: குஜிலியம்பாறை அருகே மல்லப்புரத்தில் நபார்டு வங்கியின் நிதி மற்றும் ஊராட்சி ஒன்றிய பங்களிப்பு நிதியில் இருந்து ரூ.6 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட வாரச்சந்தை கட்டடிடம் புதிதாக கட்டப்பட்டது. இதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது. குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் உமாமகேஸ்வரி தலைமை வகித்து, வாரச்சந்தை புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.