ஈரோடு, மார்ச் 4: விவசாய பயன்பாட்டிற்கான மின்சாரத்தை வேலிக்கு பயன்படுத்தினால் சம்பந்தப்பட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கதிரவன் எச்சரித்துள்ளார். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் ஈரோடு வனக்கோட்ட பகுதிகளில் மின்சாரம் தாக்கி வன உயிரினங்கள் இறப்பதை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கி பேசியதாவது:சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் ஈரோடு வனக்கோட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் நேரடி மின் இணைப்பு கொடுப்பதன் மூலம் யானைகள் உள்ளிட்ட வன உயிரினங்கள் இறப்பதை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். அவ்வாறான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.