திருப்புத்தூர், மார்ச் 2: திருப்புத்தூர் இந்திராகாந்தி பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி நிறுவனர் கணேசன் தலைமை வகித்தார். ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்வியியல் கல்லூரி செயலர் ராமேஸ்வரன் முன்னிலை வகித்தார். ஆசிரியை சேதுக்கரசி வரவேற்றார். திருப்புத்தூர் நகர் காவல்துறை ஆய்வாளர் ஆனந்தி, மாவட்ட லயன்ஸ் கிளப் சேர்பேர்சன் ஜோதி, இந்திராகாந்தி பள்ளி மேலாளர் பிரியங்கா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். திருப்புத்தூர் டி.எஸ்.பி அண்ணாதுரை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் பங்கஜம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினர்.