அரசு பள்ளி ஆண்டு விழா

பந்தலூர், மார்ச் 1: பந்தலூர் அருகே தேவாலா வாழவயல் அரசு நடுநிலைப்பள்ளியின் ஆண்டு விழா நடந்தது. தேவாலா வாழவயல் அரசு நடுநிலைப்பள்ளியின் ஆண்டு விழா, விளையாட்டுவிழா மற்றும் பணி ஓய்வு பெரும் தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடந்தது. பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சந்திரபோஸ் தலைமை வகித்தார். கூடலூர் எம்எல்ஏ திராவிடமணி வாழ்த்தி பேசினார் தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.  தொடர்ந்து இப்பள்ளியில்  பத்து ஆண்டுகளாக தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியை மார்கிரேட்க்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடந்தது இந்நிகழ்ச்சியில், மாவட்டகல்வி அலுவலர் பழனிசாமி,  வட்டார கல்வி அலுவலர் வெள்ளிங்கிரி, கூடுதல் கல்வி அலுவலர் சரவணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.  நிகழ்ச்சியில், பள்ளி  ஆசிரியர்கள்  பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: