சிவகாசி, பிப்.27:சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பள்ளபட்டியில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 54 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில் பள்ளபட்டி, அனுப்பன்குளம் கிராம ஊராட்சியில் ஆதி திராவிடர் சிறப்பு திட்டத்தில் அடிப்படை வசதிகள் செய்ய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பள்ளபட்டி கிராமத்தில் சாலை, வாறுகால், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்ய ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் பள்ளபட்டி கிராமத்தில் தற்போது வாறுகால், சாலை வசதி, பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதேபோன்று பள்ளபட்டியில் சுகாதாரத்தை மேம்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் உசிலை செல்வம் கூறுகையில், ‘‘பள்ளபட்டி கிராமத்தில் ஆதிதிராவிடர் சிறப்பு திட்டத்தில் ரூ.2 கோடி மதிப்பில் அடிப்டை பணிகள் நடந்து வருகின்றன. இந்த கிராமத்தில் வாறுகால், குடிநீர், சாலை வசதி செய்யப்பட்டு வருகிறது. ஆதி திராவிடர் சிறப்பு திட்ட நிதி மூலம் பள்ளபட்டி கிராமத்தை முன் மாதிரி கிராமமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.